×

பட்டிவீரன்பட்டி அருகே தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்

பட்டிவீரன்பட்டி, டிச. 2: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ளது அய்யன்கோட்டை ஊராட்சி. இங்கு சேவுகம்பட்டி பிரிவு செல்லும் சாலையில் உள்ள வஞ்சிஓடையின் குறுக்கே ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீரை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த அதிமுக ஆட்சியின் போது மகாத்மாகாந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை தற்போது பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், உடைந்து தண்ணீர் வீணாக செல்கின்றது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடைந்த தடுப்பணையை உடனே சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pattiviranapatti ,
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே பப்பாளி...